Wednesday, March 17, 2010

தமிழ் படவுலகம் என்ன செய்ய போகிறது?

ந‌டிகைக‌ளை ப‌ற்றி அவ‌தூறாக‌ எழுதிய‌தாக‌ தின‌ம‌ல‌ர் நாளித‌ழுக்கு எதிராக‌ க‌ண்ட‌ன‌ கூட்ட‌ம் ந‌ட‌த்தி தமிழக முத‌ல்வ‌ரின் க‌வ‌ன‌த்திற்கு கொண்டு போய் த‌ண்ட‌னையும் வாங்கி கொடுத்த தமிழ் படவுலகம் இப்பொழுது என்ன செய்ய போகிறது? கூட்ட‌த்தில் பேசிய‌ ர‌ஜினி வ‌ழ‌க்க‌ம் போல் முக‌த்தை சீரிய‌சாக‌ வைத்துக் கொண்டு 'நான் கோப‌மா இருக்கும் போதும் . . ஷ‌ந்த்தோச‌மா இருக்கும் போதும் அதிக‌ம் பேச‌ மாட்டேன்' அப்டீனு வ‌ழ‌க்க‌மான ப‌ன்ச் ட‌ய‌லாக்கோடு ஆர‌ம்பித்து, அவ‌ங்க‌ (ந‌டிகைக‌ள்) வ‌ய‌த்து பிழைப்புக்காக செய்றாங்க... அதுனால‌ ப‌த்திரிக்கையில் எழுதும் போது த‌ய‌வு செஞ்சு போட்டோ போடாதீங்கனு!!! அர‌ங்க‌த்தை அதிர‌ வைத்தாரே? இப்பொழுது வீடியோவே வெளியிட்டுள்ள ஆளுங்க‌ட்சியின் ஆத‌ர‌வு தொலைக்காட்சியை என்ன‌ செய்ய‌ போகிறார்? (வ‌ழ‌க்க‌ம் போல கோப‌மா இருக்கேன்னு சொல்லிட்டு பேசாம‌ இருக்க‌ போராரோ?)... விவேக் ஒரு ப‌டி மேலே போய் தின‌ம‌ல‌ர் நிருப‌ரை அசிங்க‌மாக‌ திட்டி உன் வீட்டு அட்ர‌ஸ குடுரா.... நான் உன் வீட்டு பொம்ப‌ளைங்க‌ குளிக்கிற‌தை (குறிப்பாக உங்க‌ ஆயாவை) போட்டோ புடிகிகிறேன்னு ச‌வுண்டு விட்டாரே?? இப்போ க‌லாநிதி மாறன் கிட்ட‌ ஆயா அட்ர‌ஸ் கேக்க‌ முடியுமா? (க‌லைஞ‌ர் கடுப்பாயிடுவாருல‌???). என‌க்கு ஒரு விச‌ய‌ம் ம‌ட்டும் புரிய‌ல‌ . . . சாமியாருங்க வலையில் ஈசியா விழுகிறார்களே? ஒரு வேளை சாமியார் கிட்ட உறவு வச்சுகிட்டா புண்ணியமுனு நினைக்கிறார்களோ?? "குள‌த்துள‌ குளிக்கும்போது கொக்கு என்ன‌ பாக்குமுனு குத்த‌ வ‌ச்சு குளிச்ச‌ பொண்ணு நானு . . ." அப்டினு த‌மிழ‌ச்சி‍‍னு ஒரு ப‌ட‌த்துல‌ ர‌ஞ்சிதா குள‌த்துல‌ குளிச்சிகிட்டே பாடுவாங்க‌ . . . மும்பைகார‌ குஷ்புவுக்கு எதிராய் முழ‌ங்கிய என் ம‌க்காள் . . இப்போ இந்த த‌மிழ‌ச்சியை என்ன‌ செய்ய‌ப் போரீங்க‌??? ஆவேசமாய் எல்லாரும் அந்த சாமியார மட்டும் காய்ச்சு காய்ச்சுனு காய்ச்சி எடுக்குறாங்க, இந்த பொண்ண ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஒரு வேளை ரஜினி சொன்ன மாதிரி வயத்து பிழைப்புக்காக செஞ்சுடுச்சுனு விட்டுடாங்க போலயிருக்கு.

5 comments:

  1. நம் கலாச்சாரத்தில் பெண்கள் உயர்வானவர்கள். தெய்வமாக மதிக்கப்படுபவர்கள். பெண் என்றால் பேயும் இறங்கும் அப்புறம் என்ன எந்த நாய் எப்படி போனா நமக்கு என்ன ...?அவரின் பணி சிறக்க வாழ்த்துவதை விட்டுவிட்டு ....வசைபாடச் சொல்லுறீங்க...?ரெம்ப டூ மச் ...அப்படி எல்லாம் நான் பெண்களுக்கு எதிரா கமண்டு போடுவேன் நினைத்து ...எழுதினா...சாரி.

    சாமி யய்யே ...மறந்துட்டோம்..அப்புறம் என்ன சாமியாரு...தமிழச்சி..ன்னு...உமக்கு பொழுதுபோகலான்னா..என் பிளாக்கு வந்து கமண்டு போடும்.
    இருந்தாலும் நீர் சொல்லுவதில் நியாயம் இருக்கிறமாதிரி தோணுது. ம்ம்ம்ம்....

    ReplyDelete
  2. ஏதோ புடிச்சிருச்சு ஒண்ணா இருந்துட்டாங்க விடுங்கண்ணே....பொழச்சு போகட்டும்! மதுரை சரவணணுக்கு ரொம்பதான் கோபம் போல....விடுங்க...பாஸ்.....!

    தேவா. S

    ReplyDelete
  3. அய்யா சரவணரே, பொழுது போகாம யாரும் ப்ளாக் எழுதுறது இல்லை. அவரவர் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்தான். (மற்றபடி உங்க ப்ளாக்கை பார்த்தேன் ரொம்ப அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வலைப்பூ உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது! அண்ணா, ஆரம்பத்துலயே ரொம்ப ஹாட் டாபிக் எடுத்துப்பேசுறீங்க..! வாழ்த்துகள்..!

    ReplyDelete
  5. மிக்க நன்றி தம்பி சந்துரு

    ReplyDelete